வருமான வரி தாக்கல் : இன்று இரவு 8 மணி வரை வங்கிகள் திறந்திருக்கும்..


வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைவதால், வரி செலுத்துவோரின் வசதிக்காக இன்று இரவு 8 மணி வரை வங்கிகள் திறந்திருக்க ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் அனைத்து கிளைகள் மற்றும், வருமான வரித்துறை அலுவலகங்களும் இரவு 8 மணி வரை திறந்திருக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. எலக்ட்ரானில் பணபரிமாற்றங்கள் இன்று நள்ளிரவு வரை ஏற்றுக் கொள்ளப்படும்.

ஏப்ரல் 1 மற்றும் 2 தேதிகள் விடுமுறை என்பதால் வாடிக்கையாளர்களின் சிரமத்தை குறைப்பதற்காக இன்று இரவு 8 மணி வரை வங்கிகளை திறந்து வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.