இந்தியா தனது விலை மதிப்பற்ற ரத்தினத்தை இழந்துள்ளது: பிரதமர் மோடி இரங்கல் உரை..


இந்தியா தனது விலை மதிப்பற்ற ரத்தினத்தை இழந்துள்ளது என்று மோடி இரங்கல் உரையில் கூறியுள்ளார். எனக்கு நிர்வாக திறனை கற்றுத் தந்தவர் வாஜ்பாய் என்று பிரதமர் கூறினார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கு பேரிழப்பு என்று பிரதமர் மோடி உருக்கமாக கூறினார். உணர்ச்சிபெருக்கால் பேச வார்த்தைகள் வரவில்லை என்று அவர் கூறினார்.

என் தந்தையை போன்றவர் வாஜ்பாய் என்று மோடி கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்துள்ளார். வாஜ்பாய் தொலைநோக்கு பார்வை கொண்டவர் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.