கலைஞருடன் கல்லக்குடி போராட்டத்தில் கலந்து கொண்டவருக்கு ஸ்டாலின் நிதியுதவி

1953ம் ஆண்டு கலைஞருடன் கல்லக்குடி போராட்டத்தில் பங்கேற்ற பெரியவர் பூவாளூர் செபஸ்தியானுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நிதியுதவி வழங்கினார்.

அந்தப் போராட்த்தில் கலைஞருடன் சிறை சென்ற 88 வயதான செபஸ்தியானின் குடும்பம் ஏழ்மையில் தவித்து வருவது ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து இன்று கரூர் நிகழ்ச்சிக்காக திருச்சி சென்ற ஸ்டாலின், பூவாளூர் செபஸ்தியானை நேரில் வரவழைத்து அவருக்கு கலைஞர் அறக்கட்டளையில் இருந்து ரூ.25,000 நிதியுதவி வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் போது, திமுக துணை பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன்,
திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் கே.என்.நேரு, திருச்சி வடக்கு மாவட்டச் செயலாளர்

ந.தியாகராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.