வாக்கை பறிக்க சலுகை வலை: மோடி அரசின் பட்ஜெட் தந்திரம்

மோடியின் செல்வாக்கு அதல பாதாளத்திற்கு சரிந்துள்ள நிலையில், மக்களவைத் தேர்தலில், வெற்றி பெறுவதற்காக பாஜக பல்வேறு குறுக்குவழிகளை தேடிப்பிடித்து செயல்படுத்தி வருகிறது.

நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் பியூஷ்கோயல் இன்று தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட்டை, அத்தகைய தேர்தல் அஸ்திரங்களில் ஒன்றாகவே பாஜக பயன்படுத்தி இருக்கிறது.

இந்த பட்ஜெட்டில் தேர்தலை மனதில் கொண்டு பல்வேறு சலுகைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள அம்சங்களைப் பார்ப்போம்…

 

புதிய அறிவிப்புகள்:

தனிநபர் வருமானவரி உச்சவரம்பு ரூ. 5லட்சமாக அதிகரிப்பு.

ரூ.6.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறுவோர் ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்வதற்கு வரி இல்லை. இதன் மூலம் 3 கோடி வரிசெலுத்துவோர் பயனடைவார்கள்.

*நிரந்தர வருமான வரிக்கழிவு ரூ.40,000 லிருந்து ரூ.50,000 ஆக உயர்வு

 அனைத்து வருமான வரித்தாக்கல் முறைகளும் 24 மணிநேரத்தில் நிறைவு செய்யப்படும்.

* 99.54 சதவீதம் வரித்தாக்கல் எவ்வித கெடுபிடிகளும் இல்லாமல் ஏற்றுக் கொள்ளப்படும்.

* அஞ்சல் சேமிப்பு திட்டங்களுக்கான டிடிஎஸ் வரம்பு ரூ.10,000 லிருந்து ரூ.40,000 ஆக உயர்த்தப்படும்.

* சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு 59 நிமிடத்தில் ரூ.1 கோடி கடன் வழங்க நடவடிக்கை

* 2வது வீடு வாங்கினாலும் வரிச்சலுகை அளிக்கப்படும்

* வீட்டு வாடகையிலிருந்து பெறும் வருமானத்திற்கு வரிச்சலுகை 1.8 லட்சத்தில் இருந்து 2.4 லட்சமாக உயர்வு.

* டெபாசிட்டில் கிடைக்கும் ரூ.50,000 வரையிலான தொகைக்கு இனி வரிபிடித்தம் இல்லை.

* வங்கி டெபாசிட்கள் மூலம் ரூ.40,000 க்கு மேற்பட்ட அனைத்து வருமானத்திற்கும் வரி உண்டு.

ரூ.10,000 வரையிலான வருமானத்திற்கு வரி கிடையாது

2 ஏக்கருக்கும் குறைவான நிலமுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 வங்கிக் கணக்கில் முன்று தவணைகளாக செலுத்தப்படும்

 

இதுவரை செய்யப்பட்டதாக கூறப்படுபவை:

 

* 2018-19 ம் நிதியாண்டில் நிதி பற்றாக்குறை 3.4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

 2018 டிசம்பரில் பணவீக்கம் 2.1 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.*

நிறுவனங்கள் திவால் சட்டம் மூலம் ரூ.3 லட்சம் கோடி மீட்கப்பட்டுள்ளது.

* மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சி திட்டத்திற்கு ரூ.60,000 கோடி ஒதுக்கீடு

* வங்கி கடன் பெற்று செலுத்தாதவர்களிடம் இருந்து ஏறக்குறைய ரூ.3 லட்சம் கோடி திரும்பப் பெறப்பட்டுள்ளது.

* நாட்டின் 98 சதவீதம் கிராமப்பகுதிகள் தூய்மை திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

5.45 லட்சத்திற்கும் அதிகமான கிராமங்கள் திறந்தவெளி கழிப்பறை இல்லாதவையாக ஆக்கப்பட்டுள்ளன.

* பிரதமர் ஆவாஸ் யோஜனா மூலம் 2014-18 ஆண்டுகளில் 1.53 லட்சம் வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளன.

* ஏழைகளுக்கு உணவு வழங்கும் திட்டத்திற்கு ரூ.1,70,000 கோடி செலவிடப்பட்டுள்ளது.

* ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டு திட்டத்தின் மூலம் 50 கோடி மக்கள் பயனடைந்துள்ளனர்.

 * மீன் வளர்ப்பிற்கு தனித்துறை உருவாக்கப்படும்.

* பசுக்களை பாதுகாக்க ராஷ்டிரிய கோகுல் திட்டத்திற்கு ரூ.750 கோடி ஒதுக்கீடு

* பிரதமர் வேளாண் திட்டத்திற்கு ரூ.20,000 கோடி

* கிராஜூட்டி வரிச்சலுகை வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்படுகிறது.

* அமைப்பு சாரா பணியாளர்களுக்கு பணி ஓய்விற்கு பிறகு பென்சன் கிடைப்பதற்காக மாதந்தோறும் ரூ.100 பிடித்தம் செய்யப்பட்டு, ஓய்விற்கு பிறகு மாதத்திற்கு ரூ.3000 பென்சன் வழங்கப்படும்.

* பாதுகாப்புத்துறைக்கு ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கீடு. தேவைப்படும் பட்சத்தில் பாதுகாப்புத்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும்

.* முத்ரா யோஜனா திட்டத்தின் மூலம் ரூ.7.23 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

* ஆளில்லா ரயில் கிராசிங் இல்லாத நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.* ரயில்வே துறைக்கு ரூ.64,587 கோடி ஒதுக்கீடு

* வடகிழக்கு மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு 21 சதவீதமாக அதிகரிப்பு

* கடந்த ஆண்டு நேரடி வரி வசூல் ரூ.12 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

* சினிமா படப்பிடிப்புகளுக்கு ஒற்றைசாளர முறையில் ஒப்புதல்

* 2030 க்குள் எலக்ட்ரிக் வாகனங்கள் மயமாக்க அரசு இலக்கு