மக்களவை தேர்தல் தொகுதி உடன்பாடு குறித்து சுமூக பேச்சு : வைகோ..

நாடாளுமன்றத் தேர்தலில் தொகுதி உடன்பாடு குறித்து திமுகவுடன் சுமூகமாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் விரைவில் எத்தனை தொகுதியில் போட்டி என அறிவிக்கப்படும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் திமுக கூட்டணிக்கு தேமுதிக வரவேண்டும் என என சில தலைவர்கள் கருதுவதாக கேள்வி எழுப்பப்பட்டது.

அதுகுறித்து தமக்கு தெரியாது என பதிலளித்த வைகோ, விஜயகாந்த் பூரண உடல் நலம் பெற்று திரும்ப வேண்டும் என்றார்.