தமிழகத்தில் இன்று 817 பேருக்கு கரோனா தொற்று…

தமிழகத்தில் இன்று 817 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 18,545 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் 558 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் 11,645 ஆக இருந்த தொற்று எண்ணிக்கை 12,203 ஆக அதிகரித்துள்ளது.

817 என்கிற மொத்த தொற்று எண்ணிக்கையில் 65.41 சதவீதத் தொற்று சென்னையில் (558) உள்ளது. தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 18,545 -ல் சென்னையில் மட்டும் 12,198 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். .
. 9,909 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்திய அளவில் மகாராஷ்டிராவிற்கு அடுத்து இரண்டாவது இடத்துக்கு வந்துள்ளது.

சென்னையும் 12 ஆயிரம் என்கிற எண்ணிக்கையைக் கடந்துவிட்டது. புலம்பெயர் தொழிலாளர்கள், அண்டை மாநிலங்களிலிருந்து தமிழகம் திரும்புவோர் தொற்றுடன் வருவது கணிசமாக அதிகரித்து வருகிறது.

இது தமிழகத்துக்குப் பெரிய சவாலாக உள்ளது. இன்று மட்டும் 139 பேர் தமிழகத்துக்கு வந்தவர்களில் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களில் தொற்று இருப்பது கண்டறியப்பட்டவர்கள் எண்ணிக்கை தினமும் சராசரி 50க்கு மேல் வருகிறது.

சென்னையின் தொற்று எண்ணிக்கையே தினமும் தமிழக தொற்று எண்ணிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உயிரிழந்த 133 பேரில் சென்னையில் மட்டுமே 96 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் சென்னையின் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி சார்பில் நம்ம சென்னை கரோனா தடுப்புத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. 36 வார்டுகளைக் குறிவைத்து ஆய்வுகள் நடத்த சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
சென்னையைத் தவிர மீதியுள்ள 20 மாவட்டங்களில் 259 பேருக்குத் தொற்று உள்ளது. 16 மாவட்டங்களில் தொற்று இல்லை. இதில் சென்னையைத் தவிர வேறு சில மாவட்டங்களிலும் மூன்று இலக்கத்தில் எண்ணிக்கை உள்ளது.
இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 6 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 133 ஆக உள்ளது. அதில் சென்னையில் மட்டுமே 96 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. இன்று அதிகபட்சமாக 558 பேருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதன் மூலம் சென்னையில் 11,645 ஆக இருந்த தொற்று எண்ணிக்கை 12,203 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் 21 மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு 888, திருவள்ளூர் 825, கடலூர் 439, அரியலூர் 362, விழுப்புரம் 332, காஞ்சிபுரம் 330, திருநெல்வேலி 301, திருவண்ணாமலை 263, மதுரை 241, தூத்துக்குடி 194, கள்ளக்குறிச்சி 227, கோவை 146, பெரம்பலூர் 139, திண்டுக்கல் 134, திருப்பூர் 114, தேனி முதன்முறையாக 108 என்கிற அளவை எட்டியுள்ளது. இவைதான் மூன்று இலக்க எண்ணிக்கையில் உள்ள மாவட்டங்கள் ஆகும்.

21 மாவட்டங்களில் மட்டும் தொற்று உறுதியாகியுள்ளது. இதுதவிர வெளிநாடுகள், வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் 139 பேருக்கும் இதுவரை தொற்று உறுதியாகியுள்ளது.

மற்ற 16 மாவட்டங்களில் தொற்று இல்லை. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 1,122 பேர். இதில் ஆண் குழந்தைகள் 594 பேர். பெண் குழந்தைகள் 528 பேர்.

13 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 15,796 பேர். இதில் ஆண்கள் 10,121 பேர். பெண்கள் 5,670 பேர். மூன்றாம் பாலினத்தவர் 5 பேர். 60 வயதுக்கு மேற்பட்டோர் 1,627 பேர். இதில் ஆண்கள் 1,010 பேர். பெண்கள் 617 பேர்.

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.