அதிமுக தலைமையில் மெகா கூட்டணி : எடப்பாடி பழனிசாமி உறுதி…

சென்னை இராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி பேசினார்

அதிமுக தலைமையில் தான் மெகா கூட்டணி என்பதில் உறுதியாக இருக்கின்றாம் என்று கூறியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை தொடங்க அதிமுக மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவு அளித்தார். கூட்டணி பேச்சுவார்த்தையை கட்சி தலைமை பார்த்துக் கொள்ளும் என்றார்.

எந்த கட்சிக்கு எவ்வளவு இடம் என்பதை அதிமுக தலைமை முடிவு செய்யும் என்று மாவட்ட மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.மக்கள் பணிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வாக்குச்சாவடி அளவில் அதிமுகவை வலுப்படுத்த வேண்டும். ஓபிஎஸ் பணம் கொடுத்து கூட்டத்தை கூட்டியுள்ளார் என்று பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.