கோவையில் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..

கோவையில் தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்விக்குச் செல்லும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தை கோவையில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
திட்டத்தை தொடங்கி வைத்து அவர் பேசும் போது ‘மாணவர்கள் கல்வி கற்க எதுவும் தடையாக இருக்க கூடாது, அதற்கு வேண்டிய உதவிகளை செய்ய நான் இருக்கிறேன், திராவிட மாடல் அரசு இருக்கிறது’.
எல்லா மாணவர்களும் உயர்கல்வி படிக்கனும், நல்ல வேலைவாய்ப்புகளை பெற வேண்டும், இதுதான் என்னுடைய கனவு’ என்று முதல்வர் பேசினார்.