அரசுப்பள்ளியில் பிற்போக்குத் தனமாக பேசிய மகாவிஷ்ணு கைது..

சென்னை கே.கே.நகர் அரசு பள்ளியில் தன்னம்பிக்கை பற்றி பேச வந்த மகாவிஷ்ணு என்பவர் பிற்போக்குத்தனமாக பேசியதை எதிர்து கேட்டார் மாற்று திறனாளி ஆசிரியர் சங்கர்.
இதனை தொடர்ந்து மக்கள் மத்தியல் ஏற்பட்ட கொதிப்பை உணர்ந்த கல்வித்துறையும் அதன் அமைச்சர் அன்பில் மகேஷ் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

சைதாப்பேட்டடை காவல் நிலையத்தில் மாற்று திறனாளிகள் அமைப்பு கொடுத்த புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு ஆஸ்திரேலியாவிலிருந்து சென்னை வந்த மகாவிஷ்ணுவை போலிசார் கைது செய்தனர்.

அவரை நீதிஜமன்றத்தில் ஆஜர் படுத்தி செப்டம்பர் 20 வரை காவலில் வைக்க நீதியரசர் உத்திரவிட்டதை தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டார் மகாவிஷ்ணு