அரசியல் இயக்கம் தொடங்க இருக்கிறேன்: மீண்டும் நடிகர் கார்த்திக் புதிய அவதாரம்..


நடிகர் கார்த்திக் நாடாளும் மக்கள் கட்சியை நடத்தி வந்தார்.தற்போது மீண்டும்3 நாட்களில் மதுரையில் புதிய கொள்கைகளோடு புதிய அரசியல் இயக்கத்தை தொடங்க இருக்கிறேன் என நடிகர் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

2016-ம் ஆண்டுக்கு பிறகு சில பல நெருடல்களால் அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தேன், மக்கள் நலன் காக்கும் பொருட்டு புதிய பெயரில் புதிய உத்வேகத்தோடு தொடங்க இருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.