சிறுமியை பணிக்கு அமர்த்திய விவகாரம் : நடிகை பானுப்பிரியா மீது வழக்கு..

சிறுமியை பணிக்கு அமர்த்தியது தொடர்பாக நடிகை பானுப்பிரியா மீது வழக்கு தொடர தொழிலாளர் நல ஆணையம் முடிவு செய்துள்ளது.

இதனால் பானுப்பிரியா மீதுள்ள குற்றச்சாட்டு மற்றும் சர்ச்சை மேலும் பூதாகரமாகியுள்ளது.

சிறுமியை பணிக்கு அமர்த்தியது தொடர்பாக நடிகை பானுப்பிரியா மீது வழக்கு தொடர தொழிலாளர் நல ஆணையம் முடிவு செய்துள்ளது.

சிறுமியை வேலைக்கு அமர்த்தி கொடுமைப்படுத்திய புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட போதும் பானுப்பிரியா மீது நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில்,

பானுப்பிரியா அளித்த நகை திருட்டுப் புகாரில் சிறுமியும், தாயும் கைது செய்யப்பட்டுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.

அந்தச் சிறுமி தற்போது கெல்லீசில் உள்ள காப்பகத்தில் உள்ளார்.

அவரிடம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் விசாரணை மேற்கொண்டார். விசாரணை அறிக்கையானது சமூகப் பாதுகாப்புத் துறை ஆணையருக்கும், தொழிலாளர் நல ஆணையத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.