அதிமுக வேட்பாளர் இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படுவார் : ஓபிஎஸ்..

திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக, அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்கள் நேற்று அறிவிக்கப்பட்டனர்.

திமுக சார்பில் பூண்டி கலைவாணன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளராக காமராஜ் நிறுத்தப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், இன்று அதிமுகவின் ஆட்சிமன்றக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் அதிமுகவின் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், கூட்டம் நிறைவு பெற்ற பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்,

“அதிமுக சார்பில் திருவாரூர் வேட்பாளராக யார் போட்டியிடுவார் என ஓரிரு நாளில் அறிவிக்கப்படும். தேர்தலை சந்திக்க அதிமுக எப்போதும் தயாராக உள்ளது”என்றார்.