அ.தி.மு.க. வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல்..

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளனர்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது.

மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில், 20 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் கடந்த 17-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், அ.தி.மு.க. வேட்பாளர்கள் இன்று நண்பகல், 12 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளனர்.

18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும், இன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார்கள்.

இதேபோல், 7 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர்களும் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.