இரட்டை இலை வழக்கு: டி.டி.வி.தினகரன் தரப்பில் இன்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு..

இரட்டை இலை சின்னம் ஓபிஎஸ்- இபிஎஸ் தரப்பு அ.தி.மு.க.வுக்கே என டெல்லி உயர்நீதிமன்றத்த் தீர்ப்பு அளித்தது. சசிகலா , டி.டி.வி.தினகரன் ஆகியோர் தனித்தனியாக தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

டி.டி.வி.தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது என டெல்லி உயர்நீதிமன்றம் கூறியது.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதை எதிர்த்து

சசிகலா, டி.டி.வி.தினகரன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில்  நீதிபதிகள் ஜி.எஸ்.சிஸ்தானி, சங்கீதா திங்ரா சேகல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது.

இந்த வழக்கில் இரட்டை இலை சின்னம் ஓபிஎஸ்- இபிஎஸ் தரப்பு அ.தி.மு.க.வுக்கே என டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பு அளித்தது.

சசிகலா , டி.டி.வி.தினகரன் ஆகியோர் தனித்தனியாக தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

டெல்லி உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படும் என டி.டி.வி.தினகரன் கூறி இருந்தார்.

இந்த நிலையில் இரட்டை இலை வழக்கில் டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து டி.டி.வி.தினகரன் தரப்பில் இன்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.