நிலுவைகளை வழங்கா விட்டால் விமானங்களை இயக்க மாட்டோம்: ஏர் இந்தியா விமானிகள் போர்க்கொடி

படி நிலுவைகளை உடனடியாக வழங்கத் தவறினால் விமானங்களை இயக்க முடியாது என்று ஏர் இந்தியா விமானிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

ஏர் இந்தியா நிறுவனம் ஊதியத் தொகைகளை வழங்கிவிட்டாலும் 70 சதவீத விமானிகளுக்கான படிகள் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஏர் இந்தியா நிர்வாகத்துக்கு இந்திய தொழில்முறை விமானிகள் சங்கம் எழுதியுள்ள கடிதத்தில் விமானிகளுக்கான படிகள் உடனடியாக வழங்கப்படவில்லையெனில் அவர்கள் விமானங்களை இயக்கமாட்டார்கள் என்றும் இதனால் ஏற்படும் போக்குவரத்து பாதிப்புகளுக்கு நிர்வாகமே பொறுப்பு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் ஊதியம் வழங்கப்பட்டுவிட்ட நிலையில் அலுவலகத்துக்கு வந்து தங்களது பணி சார்ந்த பிற வேலைகளில் ஈடுபடுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

Air India Pilots Demand their alowances