ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு : ப.சிதம்பரத்தை கைது செய்ய நவ., 26 வரை தடை நீட்டிப்பு

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்திக் சிதம்பரத்தை கைது செய்ய நவம்பர் 26 வரை டெல்லி நீதிமன்றம் தடை விதித்தது.

ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்திக் சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு விசாரணையை 26ம் தேதிக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் ஒத்திவைத்தது.