அவலாஞ்சியில் கொட்டித்தீர்த்த கனமழை : கடந்த 24 மணி நேரத்தில் 58 செ.மீ மழை பதிவு..

நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் கடந்த 24 மணி நேரத்தில் 58 செ.மீ மழை கொட்டியுள்ளது. கூடலூர் பஜாரில் 33 செ.மீ மழையும், மேல் பாவனையில் 32 செ.மீ மழையும் பொழிந்துள்ளது.

நடுவட்டம் 23செ.மீ, தேவாலா 22செ.மீ, கிளென்மார்கன் 21 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டள்ளது. நீர் நிலைகள் வேகமாக நிரம்பியதால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.