தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதீன மடங்களும் தங்களின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு..

தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதீன மடங்களும் தங்களின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அனைத்து சொத்து விவரங்களையும் பதிவுத்துறை தலைவரிடம் சமர்பிக்கும்படி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஆதீன நிலங்கள் பற்றிய விவரங்களை இந்து அறநிலையத்துறை ஆணையர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.