ஆந்திராவில் எம்.எல்.ஏ. சுட்டுக்கொலை: மாவோயிஸ்ட் தாக்குதல்..


ஆந்திராவில், ஆளும் தெலுங்கு தேசக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் கிடாரி சர்வேஸ்வர ராவ் மாவோயிஸ்டுகளால் இன்று சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த தாக்குதலில் முன்னாள் எம்.எல்.ஏ சிவேரி சோமாவும் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒருவர்மீது மாவோயிஸ்ட்டுகள் நடத்திய தாக்குதல் காரணமாக ஆந்திராவில் பரபரப்பு நிலவுகிறது.

சுட்டுக்கொல்லப்பட்ட எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் காவல் நிலையத்தை தீ வைப்பு எரித்தனர்.

போதுமான பாதுகாப்பு தரவில்லை என்று கூறி எம்.எல்.ஏ. கிடாரி சர்வேஸ்வர ராவ் ஆதரவாளர்கள்

விசாகப்பட்டினம் மாவட்டம் அரக்கு தொகுதியில் உள்ள தும்ரிகூடா காவல் நிலையத்தை சூறையாடி, தீவைத்து எரித்தனர்.