பேரறிஞர் அண்ணாவின் 49வது நினைவு நாள்: முதல்வர், துணை முதல்வர் மரியாதை..


சென்னையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினர். பேரறிஞர் அண்ணாவின் 49வது நினைவுதினத்தை முன்னிட்டு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், ராஜேந்திரன், பாலாஜி, எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், அவைத்தலைவர் மதுசூதனன் ஆகியோர் மரியாதை செலுத்தினார்கள்.