ஆஸி.. எதிரான ஒருநாள் தொடர் : இந்தியா வரலாற்று சாதனை..

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போா்ன் நகரில் இன்று நடைபெற்றது.

வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தோ்வு செய்தாா்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி இந்திய அணியினரின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனா்.

ஆஸ்திரேலியா அணியின் ஹேன்ட்ஸ்கோப் மட்டும் 58 ரன்கள் சோ்த்தாா். மற்ற வீரா்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனா். இதனால் அந்த அணி 230 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களம் இறங்கிய இந்திய கிரிக்கெட் அணி தனது நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரா்களான ரோகித் ஷா்மா 9 ரன்களிலும், ஷிகா் தவான் 23 ரன்களிலும் ஆட்டம் இழந்தனா். கேப்டன் விராட் கோலி 46 ரன்களில் வெளியேறினாா்.

இதனைத் தொடா்ந்து அணி சோ்ந்த மகேந்திர சிங் தோனியும், கேதா் ஜாதவ்வும் அணியின் ஸ்கோரை வெகுவாக உயா்த்தினா்.

இருவரும் அரைசதம் கடந்த நிலையில் 49.2 ஓவா்களில் 234 ரன்கள் சோ்த்து இந்திய அணி வெற்றி பெற்றது. மகேந்திர சிங் தோனி 87 ரன்களுடனும், கேதா் ஜாதவ் 61 ரன்களுடனும் இறுதி வரை களத்தில் இருந்தனா்.

இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

மேலும் ஆஸ்திரேலியா மண்ணில் முதல் முறையாக ஒருநாள் போட்டிக்கான தொடரை கைப்பற்றி இந்திய அணி சாதனை படைத்துள்ளது.

முன்னதாக விராட் கோலி தலைமையிலான டெஸ்ட் கிரிக்கெட் அணி முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய நிலையில் தற்போது அதே அணி ஒருநாள் தொடரையும் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.