ஏப்ரல் 29-ம் தேதி புயல் உருவாகும்: வானிலை ஆய்வு மைய இயக்குனர் பேட்டி..

வரும் வியாழக்கிழமை இந்தியப் பெருங்கடலில் குறைந்த காற்றழழுத்த தாழ்வு நிலை உருவாகும் என சென்னையில் வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் பேட்டியளித்துள்ளார்.

ஏப்ரல் 25-ம் தேதி இந்தியப் பெருங்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் கூறினார்.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று ஏப்ரல் 29-ம் தேதி புயலாக மாறும் எனவும் கூறினார்.