அறந்தாங்கியில் பெரியார் சிலை நள்ளிரவில் உடைப்பு…

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பெரியார் சிலை உடைக்கப்பட்ட நிலையில், குற்றவாளியை கைது செய்யக்கோரி சாலை மறியல் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மருத்துவமனை அருகே அழியாநிலை பிரிவு சாலை பகுதியில் 1998-ல் பெரியாருக்கு முழு உருவ சிமெண்ட் சிலை அமைக்கப்பட்டது.

அப்போது இந்த சிலையை திராவிடர் கழகத்தின் தலைவர் வீரமணி திறந்து வைத்துள்ளார்.

இந்நிலையில் இந்த சிலையின் தலையை மர்ம நபர்கள் நேற்று இரவு உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.