அரவக்குறிச்சியில் பரப்புரையின் போது கமல் மீது செருப்பு வீச்சு..

அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்ய வேட்பாளருக்கு ஆதரவாக அதன் தலைவர் கமல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

இன்று கரூர் வேலாயுதம் பாளையத்தில் இரவு பரப்புரை முடியும் தருவாயில் கமல் மீது செருப்பு வீசப்பட்டது.

இதனையடுத்து செருப்பு வீசிய நபரை மக்கள் நீதி மய்ய தொண்டர்கள் அடித்தனர். அந்த நபரை போலீசார் மீட்டு சென்றனர்.
இதனிடையே அப்பகுதி முழுவதும் தொண்டர்கள் குவிந்ததால் பரபப்பாக உளள்ளது. தொண்டர்கள் தாக்கியதில் பெண் காவலர் காயமடைந்தார்.

காவல் வாகன கண்டாடி உடைக்கப்பட்டது.