ஆக:31 மற்றும் செப்:1ல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: மத்திய நீர்வளத்துறை எச்சரிக்கை..


தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக மத்திய நீர்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் பொதுவாக வடகிழக்கு பருவ மழையை விட, தென்மேற்கு பருவ மழை காலத்தில் குறைந்த அளவே மழை பெய்யும். அந்தவகையில், கடந்த ஜூன் 1-ஆம் தேதி முதல் நேற்று (ஆக:27) வரை, 163.2 மி.மீ அளவு மழை பெய்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக மத்திய நீர்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஏற்கெனவே மேட்டூர் மற்றும் வைகை மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அணைகள் முழு கொள்ளளவை எட்டி, அணைகளில் இருந்து தொடர்ந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.