தமிழகத்தில் 15-வது மாநகராட்சியானது ஆவடி..

தமிழகத்தின் 15 வது மாநகராட்சியாக ஆவடியை தரம் உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னை, சேலம், கோவை திருச்சி உள்ளிட்ட 14 மாநகராட்சிகள் உள்ளன. இந்நிலையில், நகராட்சியாக உள்ள ஆவடியை 15 வது மாநகராட்சியாக தரம் உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் ஆவடி பகுதியில் அரசு சேவைகள், குடிநீர் மற்றும் சாலை உள்ளிட்ட வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளது.