அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு: பிரியங்கா காந்தி வேண்டுகோள்

அயோத்தி தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று  பிரியங்கா காந்தி டிவிட்டர் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டின் ஒற்றுமை, சமூக நல்லிணக்கம் மற்றும் பரஸ்பர அன்பு ஆகியவற்றை பேணி, பாதுகாக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு என்று அவர் பதிவிட்டுள்ளார்.