பழனியில் அய்யாக்கண்ணு மீது பாஜகவினர் தாக்குதல்..


பழனியில் விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ஒருவர் படுகாயம் அடைந்தார். அய்யாக்கண்ணு மீது செருப்பு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் பாஜக பிரமுகர் ஒருவர் அய்யாக்கண்ணுவை அறைந்தது குறிப்பிடத்தக்கது.