பெங்களுரு நித்தியானந்தா பிடரி ஆசிரமத்தில் குஜராத் போலீசார் சோதனை..

பிரபல நித்தியானந்தா சாமியாரின் மீது பல புகார்கள் அவ்வப்போது வந்து கொண்டே இருந்து வருகிறது.

இந்நிலையில் இளம் பெண்ணை மீட்டுதரக்கோரிய ஆள்கொணர்வு மனுவால் குஜராத் போலீசார் குஜராத் நித்தியானந்தா ஆசிரமத்தில்  சோதனை நடத்தி பெண்களை மீட்டனர்.

இந்நிலையில் நித்தியானந்தா போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு தப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது குஜராத் போலீசார் பெங்களுரு பிடரி நித்தியானந்தா ஆசிரமத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.