பேனர் விவகாரம் : நீதிமன்ற உத்தரவை மீறியதாக தமிழக அரசு மீது திமுக வழக்குப்பதிவு..


நீதிமன்ற உத்தரவை மீறியதாக தமிழக அரசு மீது திமுக எம்.எல்.ஏ. கார்த்திக் வழக்கு பதிவு செய்துள்ளார். பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் பேனர் வைக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

கோவை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் ஏராளமான பேனர்கள் வைத்திருந்தனர். கோவையில் அலங்கார வளைவில் மோதி இரு சக்கர வாகனத்தில் சென்ற ரகு என்பவர் உயிரிழந்தார். நீதிமன்ற உத்தரவை அவமதித்த தமிழக அரசு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திமுக எம்.எல்.ஏ. தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.