வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே ரேசன் அரிசி கிடைக்க வேண்டும் : உயர்நீதிமன்றம் கருத்து..

ஏழைகள் அதாவது வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்குத்தான்  இலவச ரேசன்  அரிசி கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

ரேசன் அரிசி கடத்தல் விவகாரம் குறித்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

பொருளாதார ரீதியாக வலுப் பெற்றவர்கள் இலவச அரிசி பெறுவதால் மக்களின் வரிப்பணம் பாழாகிறது எனத் தெரிவித்துள்ளது.

தேர்தல் லாபத்திற்காக மக்களை கையேந்த வைப்பதா எனவும் உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது