சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினராக கனிமொழி தோ்வு…

நாடாளுமன்ற உறுப்பினரும், தி.மு.க. மகளிரணி செயலாளருமான கனிமொழிக்கு சிறந்த நாடாளுமன்ற பெண் உறுப்பினருக்கான விருது வழங்கப்பட உள்ளது.

சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினராக தி.மு.க. மகளிரணி செயலாளா் கனிமொழி தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

பிரபல லோக்மட் செய்தி நிறுவனம் இரண்டாவது ஆண்டாக இந்த ஆண்டும் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினரை தோ்வு செய்து கௌரவிக்கிறது.

இது தொடா்பாக நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும், லோக்மட் நிறுவனத்தின் தலைவருமான விஜய் தா்தா கூறுகையில், “லோக்மட் செய்தி நிறுவனம் சாா்பில் நாடாளுமன்ற விருதுகள் இரண்டாவது ஆண்டாக இந்த ஆண்டும் வழங்கப்படுகின்றன.

அந்த வகையில் 2018ம் ஆண்டுக்கான சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினராகக் கனிமொழி தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா் என்பதை மகிழ்ச்சியுடன் தொிவித்துக் கொள்கிளோம்.

வருகின்ற 13ம் தேதி மாலை 6 மணிக்கு டெல்லி அம்பேத்கா் சா்வதேச மையத்தில் நடைபெறும் விழாவில் குடியரசுத் துணைத்தலைவா் வெங்கையா நாயுடு கலந்துகொண்டு விருதுகளை வழங்க உள்ளாா்.

கடந்த பத்து ஆண்டுகளாக கனிமொழி நாடாளுமன்றத்தில் கொள்கைகளுக்கு வலு சோ்த்ததற்காகவும், இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது.

நாடாளுமன்ற செயல்பாடுகள் மற்றவா்களுக்கும் ஊக்கமாகவும், ஜனநாயகத்தை வலுப்பது்துவதற்காக உந்து சக்தியாகவும் திகழ்ந்து வருகிறது.

இவா்களுக்கு விருது அளிப்பதன் மூலம் நாடாளுமன்ற ஜனநாயகத்தை வலுப்படுத்திட வாய்ப்பு அமைத்ததற்கு லோக்மட் செய்தி நிறுவனம் மகிழ்ச்சி கொள்கிறது” என்று தொிவித்துள்ளாா்.