பாஜக-வின் தேர்தல் அறிக்கை பொய் நிறைந்த அறிக்கையாகவே இருக்கும் : ப.சிதம்பரம்

இன்று வெளியாக இருக்கும் பாஜக-வின் தேர்தல் அறிக்கை பொய் நிறைந்த அறிக்கையாகவே இருக்கும் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மக்களவை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து ப.சிதம்பரம் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர். இந்தியாவில் ஜாதி, மத வேறுபாடுகள் இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்ற நிலைபாட்டை பாஜக கொண்டுள்ளதாக கூறினார்.