பாஜக செல்வாக்கை இழந்துருச்சு: ரஜினி திடீர் பல்டி

 

5 மாநில தேர்தல் முடிவுகள் பாஜக செல்வாக்கை இழந்து விட்டதையே காட்டுவதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் மீதும், மோடி மீதும் கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்ட போதெல்லாம், அதற்கு ஆதரவாக ரஜினிகாந்த் கருத்துத் தெரிவித்து வந்தார். அண்மையில் கூட நாட்டு மக்களுக்காக மோடி கடுமையாக உழைத்து வருவதாக கூறினார்.

இந்நிலையில், 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் குறித்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். பாஜக தனது செல்வாக்கை இழந்து விட்டதையே இந்தத் தேர்தல் முடிவுகள் காட்டுவதாக அப்போது அவர் கூறியுள்ளார்.

பாஜகவையும், மோடியையும் விட்டுக் கொடுக்காமல் இதுவரை பேசி வந்த ரஜினி, தற்போது திடீரென திசை மாறி இருப்பது பாஜகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இதனிடையே, 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் குறித்து ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ள கமல்ஹாசன், புதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம் எனக் குறிப்பிட்டுள்ளார்.