எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 4 தமிழக மீனவர்கள் கைது….

ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். 600க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று காலை கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

நள்ளிரவில் நெடுந்தீவிற்கு வடகிழக்கே மீன்பிடித்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர்,

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரத்தை சேர்ந்த முருகேசன், முனியசாமி, ரெனிட்ன், சுப்பையா ஆகிய 4 மீனவர்களை கைது செய்தனர்.