சிஏஏ-வுக்கு எதிராக போராடிய இஸ்லாமியர் மீது வண்ணாரப்பேட்டையில் போலீசார் தடியடி

 

சென்னை வண்ணாரப் பேட்டையில் இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பெண்கள் முன்னெடுத்த போராட்டத்தில் காவல்துறை பெண்கள் மீது தடியடி நடத்தியது.

இதனைக் கண்டித்து சென்னை உள்பட தமிழகமெங்கும் இஸ்லாமியர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனிடையே சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் இஸ்லாமிய அமைப்பினருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எற்பட்டுள்ளது.