குடியுரிமை சட்டம் தொடர்பான திருநங்கை வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சம்மன்..

அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் 2,000 திருநங்கைகள் பெயர் இடம்பெறாதது குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்ட் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

அசாமில் முதல் திருநங்கை நீதிபதி சுவாதி பிதன் பருவா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.