குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னையில் வரும் 23ஆம் தேதி எதிர்கட்சிகள் பேரணி

குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிராக திமுக, அதன் கூட்டணி கட்சிகள் டிசம்பர் 23ம் தேதி பேரணி நடத்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை சட்டத்திருத்தத்தைதிரும்ப பெற வலியுறுத்துவது என அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

முன்னதாக  திமுக தலைமையகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் காங்,கம்யூனிஸ்ட் , மதிமுக உட்பட பல கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்