திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள 59 மனுக்கள் தொடர்பாக ஜனவரி 22ம் தேதிக்குள் மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குடியுரிமை சட்டதிருத்தத்தை எதிர்த்து காங்கிரஸ், வி.சி.க. உள்ளிட்ட கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.