“காவிரி மேலாண்மை வாரியம்“ என்ற பெயரில் நதிநீர் பங்கீடு குழு அமைக்க மத்திய அரசு ஒப்புதல்..


காவிரி விவகாரத்தில் மத்திய அரசு அமைத்துள்ள காவிரி நதிநீர் பங்கீட்டு குழு வரைவு திட்டத்தை காவிரி மேலாண்மை வாரியம் என்ற பெயரில் அமைக்க தங்களுக்கு ஆட்சபனை இல்லையென மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது. இதனையடுத்து புதிய வரைவு திட்டத்தை நாளை சமர்பிக்க உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்திரவிட்டது. இந்த வழக்கின் விசாரணை நாளை நடைபெறவுள்ளது.