காவிரி விவகாரத்தில் அதிமுக போலி உண்ணாவிரதம்..


மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல், திருச்சியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் இன்று பேசுகிறார். தற்போது செய்தியாளர்களைச் சந்தித்த கமல், ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மத்திய அரசின் கடமை. அ.தி.மு.க-வின் போலியான உண்ணாவிரதத்தால் எதுவும் நடக்காது. இன்று நடக்கும் கூட்டத்தில் சில துறைகளுக்காகக் கொள்கைகள் அறிவிக்கப்படும்’ என்றார்.