காவேரி விவகாரம்: ஏப்ரல்-2-ல் அதிமுக உண்ணாவிரதப் போராட்டம்..


உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் மதுரையில் தெரிவித்தார்.