காவிரி விவகாரத்தில் மத்திய அரசு அவகாசம் கேட்பது ஏமாற்று வேலை : துரைமுருகன்


காவிரி தீர்ப்பை அமல்படுத்த 3 மாதம் அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இதுகுறித்து பேசிய துரைமுருகன், மத்திய அரசு 3 மாதம் அவகாசம் கேட்பது ஏமாற்று வேலை என கூறியுள்ளார். மேலும் மத்திய அரசு காவிரி விவகாரத்தில் நாடகமாடி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.