காவிரி விவகாரத்தில் பிரதமருக்கு அழுத்தம் தர தமிழக எம்.பி.க்கள் ராஜினாமா செய்யலாம் : ஸ்டாலின்..


சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஸ்டாலின் காவிரி விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பிறகு எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

இதில் திங்கள் கிழமைக்குள் பிரதமரிடமிருந்து அழைப்பு வராவிட்டால் வருகிற 8ம் தேதி சட்டமன்றம் கூட்டப்படும் என முதலமைச்சர் உறுதி அளித்துள்ளதாக கூறிய அவர், காவிரி விவகாரத்தில் பிரதமர் அனைத்து கட்சியினரை சந்திக்க மறுத்தால் தமிழக எம்.பிக்கள் ராஜினாமா செய்ய வலியுறுத்துவோம் என்றும் ஸ்டாலின் கூறினார்.