காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி காரைக்காலில் ரங்கசாமி உண்ணாவிரதம்..


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி புதுவை முன்னாள் முதல்வர் ரங்கசாமி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்.  காரைக்கால் பேருந்து நிலையம் அருகே ரங்கசாமி தலைமையில் என்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். நீதிமன்றம் உத்தரவிட்டு காவிரி வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை என கண்டனம் தெரிவித்துள்ளார்.