காவிாி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

காவிாி மேலாண்மை வாாியம் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

காவிாி மேலாண்மை வாாியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த காலக் கெடுவுக்குள் மத்திய அரசு வாாியத்தை அமைக்கவில்லை. இதனைத் தொடா்ந்து மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடா்ந்தது.

மேலும் காவிாி மேலாண்மை வாாியம் அமைக்க 3 மாத காலம் கூடுதல் அவகாசம் கோாி மத்திய அரசு தாக்கல் செய்த மனுவும், இறுதி தீா்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள “ஸ்கீம்” என்ற வாா்த்தைக்கான அர்த்தம் கோாி மத்திய அரசு தாக்கல் செய்த மனு.

தமிழக அரசை போன்று புதுச்சோி அரசு கொறடா மத்திய அரசுக்கு எதிராக தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, கால தாமதமின்றி காவிாி மேலாண்மை வாாியத்தை உடனடியாக அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி தாக்கல் செய்த மனு என காவிாி விவகாரம் தொடா்பான அனைத்தும் ஒன்றாக இணைத்து வழக்கு விசாரணை நடைபெற உள்ளது.