காவிரி மேலாண்மை வாரிய விவகாரம் : தமிழகமெங்கும் திமுக தொடர் போராட்டம்..


காவிரி மேலாண்மை வாரிய விவகாரம் தொடர்பாக மத்திய அரசை கண்டித்து திமுக தொடர் போராட்டத்தை துவக்கி உள்ளது. சென்னையில், புரசைவாக்கம், பூவிருந்தவல்லி, சைதாப்பேட்டை ஆகிய பகுதிகளில் திமுக.,வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதே போன்று கோவை, சிங்காநல்லூர் ரயில் நிலையத்தில் திமுக.,வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 75 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.