சிபிஐ அமைப்பை தடைசெய்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடி..

மேற்குவங்கத்திற்குள் சிபிஐ அதிகாரிகள் நுழைவதற்கு வழங்கப்பட்டிருந்த தடையில்லா சான்றை திரும்ப பெறுவதாக முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்

சோதனை மற்றும் வழக்கு விசாரணை தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் ஆந்திராவுக்குள் நுழைவதற்கு மாநில அரசிடம் அனுமதி பெற வேண்டுமென ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

இது தேசிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், மேற்கு வங்கத்திற்குள் சிபிஐ அதிகாரிகள் நுழைவதற்கு வழங்கப்பட்டிருந்த தடையில்லா சான்றை திரும்ப பெறுவதாக,

திரிணாமுல் காங்கிரஸைச் சேர்ந்த அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

இதன் மூலம் மாநில அரசின் முன் அனுமதியின்றி மேற்கு வங்கத்தில் நுழைய சிபிஐ அதிகாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது