சிபிஐ விசாரணை தொடங்கும் வரை நெல்லை டி.ஐ,ஜி. அல்லது சிபிசிஐடி விசாரிக்க இயலுமா? : தந்தை -மகள் உயிரிழப்பு வழக்கில் உயர்நீதிமன்ற கிளை கேள்வி

சாத்தான் குளக்காவல் நிலையத்தில் கொடூரமாக தாக்கப்பட்டு தந்தை -மகன் இருவரும் கோவில்பட்டி கிளை சிறையில் உயிரிழந்தனர்.
தந்தை -மகன் உயிரழப்பு காவலர்களின் கொடூரத்தாக்குதலால் தான் உயிரிழந்தனர் என்றும் அதற்கு காரணமான காவலர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று போராட்டம் வெடித்தது.
இந்நிலையில் இந்த வழக்கை தாமாக எடுத்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மாவட்ட நிர்வாகம் சாத்தான் குள காவல் நிலையத்தை தன் கட்டுபபாட்டில் கொண்டு வர உத்தரவிட்டது. .
தந்தை, மகன் உயிரிழப்பு குறித்து சிபிஐ விசாரணை தொடங்கும் வரை நெல்லை டி.ஐ,ஜி. அல்லது சிபிசிஐடி விசாரிக்க இயலுமா என உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும் மதியம் 12 மணிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மாஜிஸ்திரேட்டை காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் காவலர் அவமதித்தது அதிர்ச்சியளிக்கிறது எனவும் தெரிவித்துள்ளது.

டி.ஐ.ஜி. ஒருவர் தலைமையில் சிறப்பு குழு அமைத்து சாத்தான்குளம் வழக்கை விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.