மத்திய அரசு செயலிழந்து நிற்கிறது: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு…

மத்திய அரசு செயலிழந்து நிற்கிறது என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். 2019-2020 ஆண்டுகளில் 14 கோடி நபர்கள் வேலை அல்லது வாழ்வாதாரத்தை இழந்தார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இது போதாது என்று இப்பொழுது இரண்டு முக்கிய துறைகளில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தொலைதொடர்பு, விமானப் போக்குவரத்து இந்த இரண்டு துறைகளும் குலைந்தால் இன்னும் பல்லாயிரம் நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகள் அழிந்து விடும்.

இதையெல்லாம் பார்த்துக்கொண்டு மோடி அரசு செயலிழந்து நிற்கிறது. மோடி அரசின் பொருளாதார மேலாண்மை முற்றிலும் தோல்வியடைந்து விட்டது என்று நான் பல நாட்களாகச் சொல்லிவருகிறேன். மோடி அரசிடம் திட்டமும் இல்லை,

தம் மேலாண்மை தோல்வியடைந்தது என்று ஒப்புக்கொள்ளும் பணிவும் இல்லை, திறமையானவர்களின் உதவியை நாட வேண்டும் என்ற அணுகுமுறையும் இல்லை எனவும் கூறியுள்ளார்.